சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 41 குடும்பபங்களை சேர்ந்த 166 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

இன்று காலை 8 மணி நிலவரப்படி, சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 41 குடும்பபங்களை சேர்ந்த 166 பேர் அங்குள்ள 5 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்றிரவு 16 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் இருந்தது என்றும், பித்தாஸ் மற்றும் கோத்தா மருடு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சமீபத்திய மாவட்டங்களாக உள்ளன என்றும் சபா மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.

“நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதாகவும், வெளியேற்றப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் சபா மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here