பினாங்கு பாலத்தின் கீழ் மிதந்த நிலையில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

இன்று புதன்கிழமை (பிப். 1) நண்பகல் பினாங்கு பாலத்தின் கீழ், கடலில் மிதந்த நிலையில் ஒரு ஆடவரின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அந்த நபர் தீவை நோக்கி பயணிக்கும்போது, பாலத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது, இது கடந்த இரண்டு நாட்களுக்குள் நடந்த இரண்டாவது சம்பவமாகும்.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31), 34 வயதுடைய நபர் ஒருவர் பாலத்தில் இருந்து விழுந்து, கடலில் குறைந்த அலை காரணமாக சேற்றில் புதையுண்டிருந்த போது, அதிஷ்டவசமாக உயிரோடு மீட்கப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here