ஆறு மாநில சட்டமன்றங்களை கலைப்பது குறித்த விவாதம் அந்தந்த மணிலா மந்திரி பெசார் மற்றும் முதல்வர் இடையே வரும் பிப்ரவரி 21 அன்று நடைபெறும் என்று பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயோவ் தெரிவித்தார்.
“ஒருவேளை பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் விவாதம் நடத்தப்படலாம், ஏனெனில் அந்த வாரம் புத்ராஜெயாவில் பிரதமருடன் மாநில மந்திரி பெசார்கள் மற்றும் முதல்வர்கள் சந்திப்பு மற்றும் ஆட்சியாளர்களின் சந்திப்பு உள்ளது,” என்று அவர் கூறினார்.
மாநிலத் தேர்தலுக்கு வழி வகுக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டப் பேரவையை ஜூன் 1ஆம் தேதி கலைப்பதற்கு அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் முன்வந்தது குறித்து, கேட்டபோது சோவ் இவ்வாறு கூறினார்.
சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்கள் இந்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கியுள்ளன.