இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவின் தலைநகரில் இன்று வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நீர்முனை உணவகம் (waterfront restaurant) இடிந்து விழுந்ததில்,நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
5.1 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று நண்பகல் 1.28 மணியளவில் (0628 GMT) நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“ஒரு உணவகம் இடிந்து கடலுக்குள் விழுந்ததில் நால்வர் உயிரிழந்தனர் ” என்று ஜெயபுரா பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் அசெப் காலிட் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் வீடுகள் மற்றும் கடைகளை விட்டு வெளியே ஓடிவந்து, பாதுகாப்புக்காக தவித்தனர் என்றும் அவர் கூறினார்.