நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, குழந்தைகளின் நலனுக்காகவும் மலேசியா முழுவதும் உள்ள உதவி தேவைப்படும் பள்ளிகளின் பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2023 வரவு செலவுத் திட்டத்தில், அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதே அவரது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.
இன்று ஸ்ரீ பெர்டானாவில் நடந்த நாடுதழுவிய கோயில் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.