கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக 3 இந்திய நாட்டு பிரஜைகள் கைது

புத்ராஜெயா: கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 11) இங்கு அருகிலுள்ள சைபர்ஜெயாவில் உள்ள ஹாஜி ஃபிசாபில்லா மசூதிக்குப் பின்னால் உள்ள ஏரியில் மிதந்த ஒரு ஆடவரின் மரணத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகளை போலீசார் கைது செய்தனர்.

Sepang மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP Wan Kamarul Azran Wan Yusof, இன்று ஒரு அறிக்கையில், 23 மற்றும் 52 வயதுடைய மூவரும் சிலாங்கூரில் உள்ள பூச்சோங்கில் தனித்தனி சோதனையில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

நேற்று (பிப்ரவரி 12) இரவு 8 மணியளவில் பூச்சோங்கில் உள்ள கம்போங் ஸ்ரீ அமானில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், 23 மற்றும் 41 வயதுடைய இருவரைக் கைது செய்த போலீஸார், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

52 வயதுடைய மூன்றாவது சந்தேக நபர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் Taman Puchong Prima என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதோடு இரத்தக்கறையுடன் கூடிய கால்சட்டை ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கு முன்னதாக, இன்று நள்ளிரவு 12.05 மணியளவில், புத்ராஜெயா-சைபர்ஜெயா ரிங்ரோடு பாலத்தின் கீழ் உள்ள மாட்டுத் தொழுவத்தில் இருந்து ஒரு கத்தியை போலீசார் மீட்டனர்.

வான் கமருல் அஸ்ரான், கொலைக்கான காரணம் முக்கோணக் காதல் என்று நம்பப்படுவதாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சந்தேகநபர்கள் மூவரும் இந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here