ஜாலான் லாஹாட் டத்துவில் 8 தொழிலாளர் வீடுகள் தீயில் எரிந்து நாசம்

ஜாலான் லாஹாட் டத்து-சண்டாக்கானில் உள்ள ஒரு பண்ணையில் இன்று, தொழிலாளர்களின் வீடுகள் தீயில் எரிந்து நாசமானதாக, சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இன்று காலை 9.29 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து லாஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து எட்டு உறுப்பினர்களும் இயந்திரங்களும் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு சென்றபோது “ஒரு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்களின் வீடுகளின் எட்டு கதவுகள் கொண்ட பகுதி தீயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டன, மற்றொரு தொகுதி சுவர்களில் 20 விழுக்காடு எரிந்தது.

“இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார், சம்பவத்திற்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here