கோவிட்-19 நிதியுடன் தொடர்புடையதாக நம்பப்படும் கட்சி பெற்ற நிதி குறித்து விசாரணை நடத்த பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் அழைக்கப்பட்டுள்ளார் என்று உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.
விசாரணைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அறிக்கை கூறுகிறது.