ஷா ஆலாமில் போலீசார் மேற்கொண்ட சாலைப்பாதுகாப்பு நடவடிக்கையில் 285 அபராதங்கள், 81 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கடந்த சனிக்கிழமை இரவு, டத்தாரான் கெமர்டேக்கான் அருகே போலீசார் மேற்கொண்ட சாலைத்தடுப்பு நடவடிக்கையில், பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 285 சம்மன்களும், அதில் பதிவு எண்கள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 94 சம்மன்களும் வழங்கப்பட்டன, மற்றும் 81 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு மற்றும் ஷா ஆலாம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த மொத்தம் 89 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், மொத்தம் 312 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர்.

“சாலை விதிகளுக்கு மக்கள் கீழ்ப்படியாதது தொடர்பாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்து காவல்துறைக்கு பல புகார்கள் வந்ததை அடுத்து, இந்த சிறப்பு நடவடிக்கை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.

“மேலும், இந்த சிறப்பு நடவடிக்கையின் விளைவாக, ஓட்டுநர் உரிமம் இல்லாதது மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக பல்வேறு வகையான 81 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

வாகனங்கள் தவிர, அந்த நடவடிக்கையில் 341 நபர்களையும் போலீசார் சோதனையிட்டனர், இருப்பினும் போதைப்பொருள் தொடர்பான யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here