ஜோகூர் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு ஆறு மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், இன்று நண்பகலில் குளுவாங், பாலோ, ஜாலான் ஜிஎஸ்ஏ சாமெக்கில் வாலிபர் ஒருவர் காரில் இறந்து கிடக்க காணப்பட்டதாக, அம்மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முஹமட் நோ உறுதிப்படுத்தினார்.
காலை 7.20 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், உயிரிழந்ததாக நம்பப்படும் 20 வயதிற்கு உட்பட்ட K.சரத்குமார் என்று அறியப்படும் வாலிபரின் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், உயிரிழந்த வாலிபர் அப்பகுதியிலுள்ள செம்பனை தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர் என்றும், அவர் தனியாக காரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, கார் வெள்ள நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அறியமுடிகிறது.
வாலிபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு (HEBHK) அனுப்பப்பட்டதாக, அவர் மேலும் கூறினார்.