ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி, மாநிலத்தைத் தாக்கிய வெள்ளம் இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மிகவும் ஆபத்தானது என்று விவரித்தார். மக்களுக்கு விரைவில் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகளின் அனைத்துக் கட்சிகளும் கைகோர்த்துள்ளன என்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். வெள்ளம் விரைவில் குறையவும், இன்று வானிலை மேம்படவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். என்று அவர் SK Temenggong Abdul Rahmanனில் உள்ள தற்காலிக வெளியேற்ற மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக வெள்ளத்தால் சிக்கியவர்களை ஆயுதப் படைகள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் உட்பட பேரிடர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டதாக ஒன் ஹபீஸ் கூறினார். நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து தரப்பினரும் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்,. குறிப்பாக உணவு, கூடாரங்கள் மற்றும் பிற தேவைகளை வழங்குவதில் அவர் கூறினார்.
உணவு உதவி வழங்க ஒப்புக்கொண்ட சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் மற்றும் ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் ஆகியோருக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். ஜோகூரில் உள்ள அனைத்து 10 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 25,213 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
2,050 குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட செகாமாட் மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து குளுவாங் (1,559), கோத்தா திங்கி (769), ஜோகூர் பாரு (607) மற்றும் பொந்தியான் (58). செகாமட்டில் உள்ள பெர்னாமா கணக்கெடுப்பில் நீர் மட்டம் குறைந்துள்ளது. ஆனால் சில சாலைகள் இன்னும் இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.