பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் (UP) சட்டத்துறைக்கான டாக்டர் பட்டம் (honoris causa) வழங்கி இன்று கெளரவித்தது.
பொருளாதாரம், ஜனநாயகம், சுதந்திரம், நிர்வாகம், இஸ்லாம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் அவருக்குள்ள பரந்த, தெளிந்த அறிவாற்றலின் அடிப்படையிலும், அவர் அனைத்துலக அளவில் புகழ்பெற்ற நிபுணராக இருப்பதனையும் கருத்தில் கொண்டு, அவருக்கு இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என்று, பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த உயரிய பட்டத்தினை பிலிப்பைன்ஸ் நாட்டின் உயர்கல்வி ஆணையத்தின் தலைவர் ஜே. ப்ரோஸ்பெரோ இ. டி வேரா III மற்றும் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் பிலிப்பைன்ஸ பல்கலைக்கழக வாரியத்தின் பிராந்தியத் தலைவர் ஏஞ்சலோ ஏ. ஜிமெனெஸ் ஆகியோர் வழங்கி கெளரவித்தனர்.