சரவாக்கில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 5 வரையிலான காலக்கட்டத்தில் வெறிநாய் கடித்ததில் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சரவாக் துணை முதல்வர் டத்தோஸ்ரீ டாக்டர் சிம் குய் ஹியன் தெரிவித்தார்.
சிபுரான், கானோவிட், சிபு மற்றும் பிந்துலு ஆகிய மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாநில பொது சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சராகவும் இருக்கும் அவர் தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு, சரவாக்கில் மொத்தம் 12 வெறிநாய்க்கடி வழக்குகளில் 10 இறப்புகள் பதிவு செய்யப்பட்டன,” என்று அவர் இன்று (மார்ச் 6) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அவரது கூற்றுப்படி, 2017 ஆம் ஆண்டில் சரவாக்கில் வெறி நாய்க்கடி காரணமாக மொத்தம் 48 இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் இந்த வெறி நாய்க்கடியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
“வெறி நாய்க்கடிக்கு எதிரான ஆரம்பகால தடுப்பூசி உயிர்களைக் காப்பாற்றும்,” என்று அவர் மேலும் கூறினார்.









