புத்ராஜெயா: ஒற்றுமை அரசாங்கம் அதன் முழு தவணையில் ஆட்சியில் நீடிக்க வல்லது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார், அதன் பதவிக்காலம் முடிவதற்குள் அரசாங்கம் கவிழும் என்ற பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கூற்றை நிராகரித்தார். (ஹாடியின் அறிக்கை) அரசியல் சொல்லாடல்களைத் தவிர வேறில்லை என்று பிரதமர் கூறினார்.