(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
புத்ரி வாங்சா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள டாக்டர் மஸ்லீக் மாலிக், இனி மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸியுடன் ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் நேரடியாக விவாதிக்கலாம் என ஜோகூர் எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் விவாதம் நடத்தி மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதைவிட, சட்டமன்றத்தைச் சரியான தளமாகப் பயன்படுத்தி ஜோகூரின் வளர்ச்சிக்கும் பாங்ச ஜோகூரின் நலனுக்கும் தேவையான கருத்துகளை மஸ்லீக் முன்வைக்கலாம் என அச்சங்கத்தின் தலைவர் அமிருடின் முகமது அலி ஹனபியா தெரிவித்தார்.
மஸ்லீக், ஜோகூர் பி.கே.ஆர் தலைவராக நியமிக்கப்பட்டால் மந்திரி பெசாருடன் சமமான அரசியல் தளத்தில் விவாதிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, முன்னாள் கல்வி அமைச்சரான மஸ்லீக், UEC அங்கீகார விவகாரத்தையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜோகூர் எழுத்தாளர் சங்கம், தேசிய கல்விக் கொள்கைக்கு முரணான UEC அங்கீகாரத்தைத் தாங்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது




















