உயர் அலை காரணமாக பத்து பகாட்டில் இயங்கிவந்த 15 நிவாரண மையங்கள் மூடப்பட்டன

நேற்று பத்து பகாட் பகுதியில் ஏற்பட்ட கடல் அலை எழுச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் இயங்கி வந்த மொத்தம் 15 தற்காலிக நிவாரண மையங்கள் மூடப்பட்டன.

இதனால் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடங்களிலுள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

உயர் அலை நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அலை எழுச்சியினால் ஸ்ரீ மேடான், ஸ்ரீ காடிங், ஆயர் ஈத்தாம் மற்றும் பாரிட் ராஜா ஆகிய இடங்களில் வெள்ளம் மேலும் மோசமாகும் என்றும் அது கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here