மனிதர்களை மிரட்டும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 79 எலிகளுக்கு நடத்தப்பட்ட அந்த சோதனையில், 16 எலிகளுக்கு ஆல்பா,டெல்டா, ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இந்த ஆய்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.