தாய்லாந்துக்கு கடத்தப்படவிருந்த RM150,000 மதிப்புள்ள வேப் திரவம் பறிமுதல்

தாமான் ஸ்ரீ பாயுவில் அமைந்துள்ள குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், பல்வேறு பிராண்டுகள் மற்றும் பல சுவைகள் கொண்ட வேப் திரவ பொருட்களை கூரியர் பெட்டிகளில் பதுக்கி வைத்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், RM150,000 மதிப்புள்ள வேப் திரவமும் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று மாலை 5 மணியளவில் நடந்த சோதனையில், சட்ட நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணிபுரியும் 38 வயது நபர் வசிக்கும் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தும்பாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அம்ரான் தோலா தெரிவித்தார்.

“இந்தப் பொருட்கள் கோலோக் ஆறு வழியாக தாய்லாந்திற்கு கடத்தப்பட இருந்ததாக நம்பப்படுகிறது.

அந்த நபர் வேப் திரவத்தை விற்கும் வளாகமாக தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து குறித்த பொருட்களைப் பெற்றதாகவும் விசாரணையில் அறிய முடிந்தது என்று அம்ரான் கூறினார்.

மேலும் சந்தேகநபருக்கு கடந்த ஆண்டு இதே குற்றத்துடன் தொடர்புடைய கடந்தகால குற்றவியல் பதிவு இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

விஷம் சட்டம் 1952ன் பிரிவு 13A-ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here