தாம்பின், தாமான் குனுங் மாஸில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், மொத்தம் நான்கு இரண்டு மாடிகள் கொண்ட வீடுகள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் இரவு 9.13 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், அழைப்பு வந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தாம்பின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், துணை தீயணைப்புத் தலைவர், முகமட் சயீத் ஜகாரியா கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், முதல் வீட்டில் தீ மளமளவென எரிந்து கொண்டிருந்ததை கண்டதாகவும், உடனடியாக தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டு தீயை கட்டுப்படுத்தியதாகவும் கூறினார்.
இந்த தீ விபத்தில், முதல் வீட்டில் 60 விழுக்காடு தீ விபத்து ஏற்பட்டதாகவும், இரண்டாவது வீடு 20 விழுக்காடு சேதமடைந்ததாகவும், மூன்றாவது மற்றும் நான்காவது வீடுகள் வயரிங் சம்பந்தப்பட்ட முன் பகுதியில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“மேலும், இந்த தீ விபத்தில் முதல் வீட்டில் இருந்த இரண்டு வாகனங்கள், அதாவது தோயோத்தா விஷ் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் எரிந்தன.
இரண்டாவது வீட்டில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பெரோடுவா மைவி காரும் தீப்பிடித்து எரிந்தது.
இரவு 9.36 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது ” என்று அவர் சம்பவம் நடந்த இடத்தில் சந்தித்தபோது கூறினார்.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இழப்புக்கான காரணம் மற்றும் அளவு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் முகமட் சயீத் கூறினார்.