துவாஸ் சோத­னைச் சாவடி வழி­யா­கச் செல்­லும் வாகனங்களுக்கு இனி நாள் முழு­வ­தும் ஒரே கட்டணம் அறவிடப்படும்

சிங்­கப்­பூர் அல்­லது மலே­சி­யா­விலி­ருந்து துவாஸ் சோத­னைச் சாவடி வழி­யா­கச் செல்­வோ­ருக்கு பரபரப்பான நேரங்களில் வழங்­கப்­பட்ட சலுகை மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கிறது என்று, சிங்கப்பூர் நிலப் ­போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்­தப் புதிய நடை­முறை மார்ச் மாதத்­தி­லி­ருந்து நடமுறைக்கு வரு­கிறது என்றும், தற்போது பரபரப்பான நேரங்களில் அறவிடப்படும் கட்­ட­ணம், இனி நாள் முழு­வ­தும் நீட்டிக்­கப்­ப­டு­வ­தாகவும் அது தெரி­வித்­தது.

மேலும் மோட்­டார் சைக்­கிள் ஓட்­டி­க­ளுக்கு கட்­ட­ணத்­தி­லி­ருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்­ள­தில் மாற்­ற­மில்லை என்­றும் அது குறிப்­பிட்­டது.

அண்­மை­யில் மலே­சி­யா­வின் தஞ்­சோங் குபாங் சாலைக் கட்­ட­ணத்­தில் செய்­யப்­பட்ட மாற்­றத்­தைத் தொடர்ந்து, அதற்கு ஈடான கட்­ட­ணத்தை வசூ­லிக்­கும் சிங்­கப்­பூ­ரின் நீண்­ட­காலக் கொள்­கை­யின்­படி இந்த மாற்­றம் இடம்­பெறு­வ­தாக ஆணை­யம் மேலும் கூறி­யது.

புதிய மாற்­றத்­தின்­படி கார் ஓட்­டு­ப­வர்­கள் நாள் முழு­வ­தும் $2.10 கட்­ட­ணம் செலுத்த வேண்­டும். அத்தோடு கன­ரக சரக்கு வாக­னங்­களுக்கு நாள் முழு­வ­தும் $11.30 கட்டணம் அறவிடப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

வெளி­நாட்­டில் பதிவு செய்த வாக­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் நுழை­வ­தற்கு நிலப் போக்குவரத்து ஆணை­யத்­தி­ன் வாகன நுழைவு அனு­மதி அட்டை, ஒப்­பு­தல் அளிக்கப்பட்ட மின் அஞ்­சலை வைத்­தி­ருக்க வேண்­டும். அத்தோடு வலுவிலுள்ள ‘ஆட்டோ­பாஸ்’ அட்­டை­யும் வைத்­தி­ருக்கவேண்­டும் என்றும் அது நினைவுபடுத்தியது.

வாகன நுழைவு அனு­ம­தி­யில்­லா­த­வர்­கள் ஆணை­யத்­தின் ‘OneMotoring’ இணையத்தளம் வழி­யாக அதற்கு விண்­ணப்­பிக்­க­லாம் என்றும் சிங்கப்பூர் நிலப் ­போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here