குவாந்தன்: கோலா லிப்பிஸின் கம்போங் பாயா கெளடியில் உள்ள அவரது வீடு இன்று தீப்பிடித்ததில், முதியவர் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் மாலை 5 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது என்றும், பலியானவர் 77 வயதான யூசோப் கிண்டோக் என அடையாளம் காணப்பட்டதாகவும், லிப்பிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், அஸ்லி முகமட் நூர் கூறினார்.
“தனியாக வாழ்ந்து வந்த பாதிக்கப்பட்டவர் அவரது வீட்டிலிருந்து ஐந்து மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டார், முற்றிலும் மரத்தினாலான அவரது வீடு தீப்பிடித்தபோது, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்கு நேரம் இல்லை என்று நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோலா லிப்பிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், தீ விபத்து மற்றும் இறப்பிற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அஸ்லி கூறினார்.









