ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று புதன்கிழமை (மார்ச் 22) காலை 8 மணி நிலவரப்படி, 701 குடும்பங்களைச் சேர்ந்த 2,540 பேர் பத்து பகாட் மாவட்டத்திலுள்ள 20 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு நிலச்சரிவுகள், மூழ்கும் குழிகள் மற்றும் சேதமடைந்த பாலம் காரணமாக கூலாயிலுள்ள ஒரு சாலை மற்றும் குளுவாங்கில் இரண்டு சாலைகள் அனைத்து வாகனங்களும் இன்னும் மூடப்பட்டுள்ளன என்று, ஜோகூர் பேரிடர் மேலாண்மை குழு இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.