ஜோகூரில் RM3.22 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் – இருவர் கைது

நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 21), ஜோகூர் போலீசார் நகரின் மூன்று தனித்தனி இடங்களில் மேற்கொண்ட சோதனையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும், இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 

அவர்களிடமிருந்து RM3.22 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

34 மற்றும் 38 வயதுடைய இரு சந்தேக நபர்களும், ஸ்டோர் கீப்பர்களாக பணிபுரிவதாக நம்பப்படுகிறது, நேற்று பிற்பகல் 3.15 முதல் 5 மணி வரை நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டதாக, ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 119,750 எரிமின் 5 மாத்திரைகள், 5,360 கிராம் எக்ஸ்டசி பவுடர், கெட்டமின் (903 கிராம்), எக்ஸ்டசி மாத்திரைகள் (865 கிராம்), மேஜிக் காளான் (270 கிராம்) ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். குறித்த போதைப்பொருட்கள் 145,928 போதைப் பித்தர்கள் பயன்படுத்த போதுமானது ,” என்று அவர் இன்று ஜோகூர் IPK இல் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இந்தக் கும்பல் கடந்த ஜனவரி முதல் செயல்படுவதாக நம்பப்படுகிறது.

அவர்களிடமிருந்து ரொக்கம், நகைகள் மற்றும் நான்கு வாகனங்கள் அடங்கிய RM210,450 மதிப்புள்ள சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று கமாருல் ஜமான் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படும் அதே வேளையில், விசாரணைகளை எளிதாக்கும் வகையில் சந்தேகநபர்கள் இருவரும் மார்ச் 28 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here