கம்போடியாவில் வேலை மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்ட மேலும் 12 மலேசியர்கள் மீட்பு -பிரதமர்

கம்போடியாவில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட மேலும் 12 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் உள்ள மலேசிய தூதரகம் குறித்த 12 நபர்களையும் விடுவிக்க ஏற்பாடு செய்யும் என்று அவர் கூறினார்.

கம்போடியாவிற்கு நேற்று தனது ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட பிரதமர், இந்த எண்ணிக்கை முன்னர் கூறிய தொகையிலிருந்து (287) புதுப்பிக்கப்படுகிறது (299) என்று அங்கு நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

இதற்கிடையில், கம்போடியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ எல்டீன் ஹுசைனி முகமட் ஹாஷிம் கூறுகையில், கிடைத்த தகவலின் அடிப்படையில், மீட்கப்பட்ட 12 நபர்களும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருப்பதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்திற்கு நாளை தூதரக பணியாளர்கள் சென்று, அவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியை தொடங்குவார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here