காதலி உறவைத் தொடர மறுத்ததால் கோபமடைந்து, அப்பெண்ணின் வாகனத்தை எரித்துவிடுவதாகவும், அப்பெண்ணைக் காயப்படுத்தப் போவதாகவும் மிரட்டிய காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில், 27 வயதுடைய பெண் பாண்டான் பெர்டானாவில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, 42 வயதான சந்தேக நபர் வாகனத்தை சேதப்படுத்தி, பாதிக்கப்பட்டவரை காயப்படுத்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் தனது பாதுகாப்பு குறித்து கவலையடைந்த பாதிக்கப்பட்ட பெண், மேல் நடவடிக்கைக்காக பாண்டான் இண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவலின் பேரில், அம்பாங் ஜெயா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக் குழு, கோலாலம்பூரில் வைத்து அவரை நேற்று கைது செய்தது என்று, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.
“கடந்த கால குற்றப் பதிவுகளைச் சரிபார்த்ததில், சந்தேகநபரிக்கு 19 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் அதில் மூன்று வழக்கில் அவர் இன்னும் தேடப்பட்டு வருவதும் கண்டறியப்பட்டது.
“ஆரம்ப சிறுநீர் பரிசோதனைகளில் அவருக்கு THC மற்றும் AMP போதைமருந்துகளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது,” என்றும், சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.