கோலாலம்பூர், Middle Ring Road 2இல் இரு வாகனங்கள் மோதிய விபத்தில் சிக்கிய வாகனமோட்டியை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். திங்கள்கிழமை (ஏப்ரல் 10) மதியம் 12.32 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்ததாக செயல்பாட்டுத் தளபதி முகமட் ஃபக்ருசி சியாகிரின் மாமத் தெரிவித்தார்.
இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் அவசர மருத்துவ மீட்பு சேவைகள் வாகனம் 15 பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு பெரோடுவா மைவி மற்றும் லோரி விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் காரின் ஓட்டுநர் வாகனத்தில் மாட்டிக் கொண்டார் என்று அவர் திங்கள்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பிற்பகல் 1.11 மணியளவில் ஓட்டுநர் வாகனத்தில் இருந்து இறக்கி விட்டதாக அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்டவரின் இடது கை உடைந்தது. மேலும் சிகிச்சைக்காக Universiti Kebangsaan Malaysia Medical Centre அழைத்து செல்லப்பட்டார் என்று அவர் கூறினார்.