கோலாலம்பூருக்குச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) 402.7 ஆவது கிலோமீட்டரில், டிரெய்லரின் பின்புறத்தில் ஐஸ் கட்டிகளை ஏற்றிச் சென்ற லோரி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு அதிகாலை 4.13 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) சிலாங்கூர் இயக்குநர் மோர்னி மாமட் கூறினார்.
உடனே புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இயந்திரங்களுடன் 10 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
“முதற்கட்ட தகவல்களின்படி, ஐஸ் கட்டிகளை ஏற்றிச் சென்ற இசுசூ லோரி ஸ்கேனியா டிரெய்லரின் பின்பக்கத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
“லோரியில் பயணித்த 30 வயதுக்குட்பட்ட இருவர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும், உயிரிழந்த இருவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மோர்னி கூறினார்.