லோரி மற்றும் காரை உட்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் மரணம் – இருவர் காயம்

செக்கோலா கெபாங்சான் (SK) போஸ் ராயா அருகே, ஜாலான் சிம்பாங் பூலாய் – கேமரன் மலைப்பகுதியில் காய்கறி ஏற்றிச் சென்ற லோரி மீது கார் மோதியதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரின் கணவர் மற்றும் மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இறந்தவர் திங் செயோங் மீ (57) என அடையாளம் காணப்பட்டார். ஹோண்டா சிட்டி காரை ஓட்டிச் சென்ற உயிரிழந்தவரின் மகள் யோங் யீ டோங் (32) மற்றும் அவரது கணவர் சியோங் மீ ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் செயல்பாட்டு மையத்தின் துணை இயக்குநர், முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.

“ஆரம்பத் தகவலின் அடிப்படையில், கேமரன் ஹைலேண்ட்ஸிலிருந்து ஈப்போவிற்குச் செல்லும் வழியில், குறித்த விபத்து நடந்தது என்றும், உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​பின்புற பயணிகள் பக்கத்தில் அமர்ந்து பயணித்த பாதிக்கப்பட்டவர் பலத்த காயம் அடைந்தது கண்டறியப்பட்டது மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தப்பட்டது” என்று அவர் கூறினார்.

மேலும் காயமடைந்த இருவருக்கும் அவசர சேவைகள் உதவிப் பிரிவின்  உறுப்பினர்களால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு (HRPB) அனுப்பப்பட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here