அடுத்த மாதம் சுவிட்சர்லாந்து மற்றும் தென் கொரியாவில் நடைபெறவுள்ள இரண்டு அனைத்துலக மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக, தனது கடப்பிதழை தற்காலிகமாக விடுவிக்கக் கோரி, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த மனுவை, இன்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
சைட் சாதிக்கின், 30, இந்த விண்ணப்பத்திற்கு துணை அரசு வழக்கறிஞர் எந்த அடசேபனையும் தெரிவிக்காததைத் தொடர்ந்து, குறித்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி டத்தோ அசார் அப்துல் ஹமிட் அனுமதித்தார்.
குறித்த விண்ணப்பத்தை அனுமதித்த நீதிமன்றம், நாடுதிரும்பியதும் அவரது கடப்பிதழை மே 20-ம் தேதிக்கு முன் நீதிமன்றத்தில் திருப்பித் தருமாறும் சைட் சாதிக்கிற்கு உத்தரவிட்டது.