சிரம்பான், போர்ட்டிக்சனுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தின் மகிழ்ச்சி சோகமாக மாறியது. பந்தாய் சாஹாயா கடற்கரையில் நீந்தச் சென்ற மூன்று சகோதரிகள் நீரில் மூழ்கி இறந்தனர். மேலும் இருவரை இங்குள்ள பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) மதியம் மீட்டனர்.
தெலோக் கெமாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் அஜீஸீ அலியாஸ் கூறுகையில், நீரில் மூழ்கிய மூவரும் சிலாங்கூர் பந்திங்கை சேர்ந்த ஆர். கலைவாணி 30, ஆர். தேவிகா, 29 மற்றும் ஆர். சத்தியாதேவி, 19 என அடையாளம் காணப்பட்டனர். மாலை 5.57 மணியளவில் பொதுமக்களிடமிருந்து ஒரு துயர அழைப்பின் பேரில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடற்கரையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உயிரிழந்த மூவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. சம்பவத்தின் போது அலை அதிகமாகவும், கடல் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. அப்பகுதி நீச்சல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
காப்பாற்றப்பட்ட மற்ற இருவர் ஆர். வீரன், 26, மற்றும் ஜே. சதீஸ்வரன் 29. அவர்கள் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர். இருவரும் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பெர்னாமாவிடம் கூறினார். மூன்று சகோதரிகளின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அஸீஸ் கூறினார்.