மாநில தேர்தல் தொகுதி பேச்சுவார்த்தையில் எந்த உறுப்புக் கட்சியையும் தேசிய முன்னணி விலக்காது என்கிறார் ஜம்ரி

வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கான இடங்களுக்கான பேச்சுவார்த்தையில் தேசிய முன்னணியின் கூட்டணியின் கீழ் உள்ள எந்தக் கட்சியையும் அது விலக்காது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

தொகுதி பங்கீடு குறித்த முடிவு தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளின் பரஸ்பர உடன்பாட்டிற்கு உட்பட்டது என்று அவர் மேலும் கூறினார். இந்த விஷயம் BN அல்லது PH கூட்டணியுடன் இணக்கமாக விவாதிக்கப்படும் என்று, நேற்றைய BN  உச்சமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, MCA துணைத் தலைவரும், பினாங்கு MCA தலைவருமான Tan Teik Cheng, இரு கூட்டணிகளுக்கும் இடையிலான இட ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தையில் அனைத்து உறுப்புக் கட்சிகளும் பங்கேற்க  வேண்டும் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here