தம்புனிலுள்ள ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் மூன்று வயது சிறுமி நீரில் மூழ்கி சடலமாக கண்டெடுப்பு

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) மாலை தம்புனிலுள்ள ஒரு வீட்டின் குழந்தைகளுக்கான நீச்சல் குளத்தில் மூழ்கி மூன்று வயது சிறுமி ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறுமி குளத்தில் மிதப்பதை அவரது சகோதரர் கண்டுபிடித்ததாகவும், உடனடியாக அச்சிறுமி மீட்கப்பட்டு ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பேராக் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோஸ்ரீ முஹமட் யூஸ்ட்ரி ஹாஸான் பாஸ்ட்ரி கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் தாத்தாவின் பக்கத்து வீட்டுக்காரருக்குச் சொந்தமான நீச்சல் குளம் அந்த வீட்டின் ஓரத்தில் இருப்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

“சம்பவம் நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் உறவினர்களுடன் வீட்டில் இருந்தார், அதே நேரத்தில் அவரது தந்தை மற்றொரு உறவினரை வீட்டிற்கு அனுப்பச் சென்றிருந்தார்.

“மாலை 6.30 மணியளவில், பாதிக்கப்பட்டசிறுமியின் சகோதரர் சிறுமி குளத்தில் மிதப்பதைக் கண்டார், மேலும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர் இன்று திங்கள்கிழமை (மே 1) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரவு 9.25 மணியளவில் மரணம் குறித்து மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக முகமட் யூஸ்ரி தெரிவித்தார்.

திங்கள்கிழமை நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அச்சிறுமி நீரில் மூழ்கி இறந்ததால் மரணம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இருப்பினும் நியாயமான கண்காணிப்பு இல்லாமல் குழந்தையை விட்டுச் சென்றதற்காக, குழந்தைகள் சட்டம் பிரிவு 33-ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பெற்றோரின் அலட்சியத்தால் ஈப்போவில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள நீரில் மூழ்கிய நான்காவது வழக்கு இது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here