கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் முன்னாள் போலீஸ்காரருக்கு ஏழு நாட்கள் தடுப்புக் காவல்

கடந்த சனிக்கிழமை தாமான் புக்கிட் செங்கில் நடந்த கொள்ளை வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக முன்னாள் போலீஸ்காரர் ஒருவருக்கு ஏழு நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை மே 9 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க மலாக்கா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஷர்தா ஷீன்ஹா முகமட் சுலைமான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

35 வயதுடைய சந்தேகநபர், தனது நண்பருடன் சேர்ந்து, பாதிக்கப்பட்டவர் தனது வீட்டின் வராந்தாவில் வாகனத்தை நிறுத்தியிருந்தபோது, பாதிக்கப்பட்டவரிடம் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

வாயிலுக்கு அருகில் அவரது நண்பர் காத்திருந்த போது, சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்ததாக கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டப்பிரிவு 395/397-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here