மரம் விழுந்ததில் 3 கார்கள் சேதம்

செர்டாங்: இன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து ஜாலான் 9E Equine Park என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் சேதமடைந்தன.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்க இயக்குநர் ஹபிஷாம் முகமட் நூர் கூறுகையில், மாலை 5.20 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்தவுடன் செர்டாங் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு இயந்திரம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

தீயணைப்பு இயந்திரம், அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) குழுவுடன் மாலை 5.30 மணியளவில் இடத்திற்கு வந்தது. இந்தச் சம்பவத்தில் 15 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு மரங்கள் விழுந்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்களை அடித்து நொறுக்கியது.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here