மே 15 அன்று நெகிரி செம்பிலானிலுள்ள 3 மாவட்டங்களில் 24 மணி நேர நீர் வெட்டு

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு வரும் திங்கட்கிழமை (மே 15) காலை முதல் 24 மணி நேரம் தண்ணீர் விநியோகம் தடைபடும் என்று, ஆயிர் நெகிரி செம்பிலான்
(Sains) நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே15 அன்று காலை 8 மணி முதல் ரெம்பாவ், போர்ட்டிக்சன் மற்றும் சிரம்பான் ஆகிய பகுதிகளுக்கு பராமரிப்பு பணிகள் மற்றும் குழாய்களை இடமாற்றம் செய்து, மீண்டும் இணைக்கும் பனி நடைபெறவுள்ளதால் இந்த நீர் விநியோகம் தடை ஏற்படும் என்று, ஆயிர் நெகிரி செம்பிலான் நிறுவனத்தின் நிர்வாக சேவைகள் துறைத் தலைவர் அஸ்லி அஸாஹரி கூறினார்.

இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் கட்டங்களாக நீர் விநியோகம் சீரமைக்கப்படும் என அஸ்லி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here