டத்தோஸ்ரீ பட்டம் தருவதாக கூறி RM571,000 மோசடி

டத்தோஸ்ரீ பட்டத்தை தருவதாகக் கூறி ஏமாற்றியதால் 63 வயது ஒப்பந்ததாரர் ஒருவர் RM571,000 இழந்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு பிப்ரவரி மாத நடுப்பகுதியில் பிஜயா இஸ்தானா பகாங்கின் டத்தோ மேலாளர் என்று தன்னைக் கூறிக்கொண்ட சந்தேகிக்கப்படும் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்றும், பாதிக்கப்பட்டவருக்கு “டத்தோஸ்ரீ” என்ற பட்டத்துடன் பகாங் மாநில அரசு மரியாதையை வழங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டதாக, பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோ யஹாயா ஓத்மான் கூறினார்.

மேலும் “பாதிக்கப்பட்டவருக்கு ஆறு கவுரவங்களை வழங்க இருப்பதாகக் கூறிய சந்தேக நபர், இவற்றை பெறவேண்டுமாயின் முதலில் அரண்மனை திட்டத்திற்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

“பாதிக்கப்பட்டவர் சந்தேகநபரால் கூறப்பட்ட சலுகையில் ஆர்வமாக இருந்தால், “கடந்த பிப்ரவரி முதல் இந்த மாதம் வரை, சந்தேக நபர் இஸ்தானா நெகிரி பகாங்கின் திட்டத்திற்காக சில நன்கொடைகளை வழங்குமாறு பாதிக்கப்பட்டவரிடம் கேட்டார்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எனவே அவர் ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் 32 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் RM571,000 பணத்தை பரிமாற்றம் செய்தார். அதற்காக பாதிக்கப்பட்டவர் தனது மற்றும் தன் நண்பர்களின் சேமிப்பினை பெற்று செலுத்தியதாகக் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here