இன்று சனிக்கிழமை (மே 27) காலை 6 மணியளவில் பாலிக் பூலாவ்-இலுள்ள பந்தாய் மலிண்டோவில் உள்ள ஜெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 படகுகள் சேதமடைந்தன.
56 வயதான வான் மொஹிசான் வான் ஹுசைன் என்ற மீனவர் கூறுகையில், தனது படகு தொலைவில் நிறுத்தப்பட்டிருந்ததால் தீயில் இருந்து தப்பியதாகவும், ஆனால் அங்கிருந்த வேறு ஆறு படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையில், மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், காலை 6.28 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரு குடிசை மற்றும் பல படகுகள் எரிந்தன.
குறித்த தீவிபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் 14 தீயணைப்பு வீரர்கள் காலை 6.39 மணிக்கு குறித்த இடத்திற்கு வந்தடைந்ததாகவும், 7.23 மணிக்கு தீயை அணைக்க முடிந்தது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் “குடிசை 100 விழுக்காடு எரிந்துள்ளது, மேலும் நான்கு படகுகள் 80 விழுக்காடு தீயில் சேதமடைந்தன. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,” என்றும், தற்போது வழக்கு விசாரணை இடம்பெற்றுவருகிறது எனவும் கூறப்படுகிறது.