பதின்மவயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில், ஒப்பந்த தொழிலாளி
ஒருவர் மலாக்கா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட முஹமட் அசிரஃப் மஜித், 30, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி தர்மாஃபிக்ரி அபு ஆடம் முன்னிலையில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், 5 செப்டம்பர் 2020 அன்று மலாக்கா தெங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு 10.30 மணியளவில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அனுமதியின்றி, சம்பவத்தின் போது 18 வயதுடைய பெண்ணுடன் உடலுறவு கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் சவுக்கால் அடிக்கும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (2) (a) இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழுக்கில் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் RM15,000 ஜாமீன் வழங்க அனுமதித்தது மற்றும் வழக்கின் மறுவிசாரணையை ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.