பள்ளத்தில் விழுந்த கார்; தந்தை பலி – இரு மகள்கள் காயம்

லாபுவான், கம்போங் லயங்கனில் பெரோடுவா கஞ்சில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 48 வயதான தந்தை இறந்தார். அவரது இரண்டு மகள்கள் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 2) இரவு 8 மணியளவில் நடந்த விபத்தில் அப்த் ரஷித் பஹாரி என அடையாளம் காணப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது எட்டு வயது மகள் நூர் அகீஷா மற்றும் நோர் இசா பத்ரிஸ்யா (10) ஆகியோர் காயம் அடைந்தனர்.

லயங்கன் தீயணைப்பு நிலையத் தலைவர் ஹுசிமான் மாலிகின் கூறுகையில், இரவு 8.26 மணிக்கு விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும். ஒரு குழு விரைவாக அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

காரின் முன் பகுதி மோசமாக சேதமடைந்ததால், இறந்தவரை வாகனத்தில் இருந்து இறக்குவதற்கு தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமப்பட்டதாக அவர் கூறினார். உடலை மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தோம் என்று அவர் கூறினார்.

தீயணைப்பாளர்கள்  அபாயகரமான கூறுகள் உள்ள பகுதிகளை சரிபார்த்த  பிறகு இரவு 9.25 மணிக்கு செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here