தஞ்சோங் மாலிம், Teratak River View, Lubuk Hantu, Simpang Empat அருகே ஆற்றில் குளித்த எட்டு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி முகமட் நஸ்ரி சைடின் கூறுகையில், மாலை 5.06 மணியளவில் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சோங் மாலிம் நிலையத்தில் இருந்து மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றார். அங்கு வந்தவுடன், ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் காணாமல் போனதாகவும், நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சுவதாகவும் தங்களுக்குத் தகவல் கிடைத்தது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.