EGO தேன் கலந்த பேரீச்சம் பழத்தில் அதிகளவு இரசாயனம் – சிங்­கப்­பூர் சந்தையிலிருந்து உடனடியாக மீட்டுக்கொள்ள உத்தரவு

EGO-­வின் தேன் கலந்த பேரீச்­சம் பழத்­தில் அள­வுக்கு அதி­க­மாக சல்­ஃபர் டைஆக்­சைட் கலந்­தி­ருப்பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தால், அவற்றை உட­ன­டி­யாக மீட்­டுக்கொள்ள உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது.

ஒவ்­வாமை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அந்த இரசா­ய­னம் கலந்­தி­ருப்­பது குறித்து உண­வுப் பொட்­ட­லத்­தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

அடுத்த ஆண்டு நவம்­பர் 18ஆம் தேதி காலா­வ­தி­யாக வேண்­டிய ஒரு தொகுதியில், அனு­ம­திக்­கப்­பட்ட அள­வுக்கு மேல் இரசா­ய­னம் கண்டுபிடிக்கப்பட்ட­து என்று நேற்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­தது.

இது, சீனா­வி­லி­ருந்து தரு­விக்­கப்­ப­டு­கிறது. இதனை இறக்­கு­மதி செய்த கீ வீ ஹப் கீ உண­வுத் தயா­ரிப்பு நிறு­வ­னத்­துக்கு அவற்றை மீட்­டுக் கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதை­ய­டுத்து கடை­களில் உள்ள இந்த வகை பேரீச்­சம் பழங்­கள் மீட்டுக்கொள்ளப்­ப­டு­கின்­றன.

உண­வில் அள­வுக்கு அதிக மாக சல்­ஃபர் டைஆக்­சைட் சேர்க்­கப்­பட்­டால் சில தனிப்­பட்ட வர்­க­ளுக்கு ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்­தக் கூடும். அரிப்பு, படை, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி போன்ற அறி­கு­றி­கள் ஏற்­ப­ட­லாம். இத்தகைய பேரீச்­சம் பழங்­களை வாங்­கிய வாடிக்­கை­யா­ளர்­கள் அவற்றை திருப்பி அளிக்­கும்­படி சிங்­கப்­பூர் உணவு நிலை­யம் கேட்­டுக் கொண்­டுள்­ளது. இத­னைச் சாப்­பிட்டு உடல்­நிலை சரி­யில்­லா­த­வர்­கள் மருத்­துவ சிகிச்­சையை நாட­லாம் என்று உணவு அமைப்பு அறி­வு­றுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here