மாமன்னர்,அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாமன்னர் மற்றும் முழு அரச குடும்பமும் கருணை, வழிகாட்டுதல், ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பாக அன்வார் பிரார்த்தனை செய்தார்.
நானும் அனைத்து மக்களும் அரசியலமைப்பு மன்னரின் நிறுவனத்திற்கு தொடர்ந்து கீழ்ப்படிவோம் மற்றும் விசுவாசமாக இருப்போம் என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரச தலைவராகவும், இஸ்லாத்தின் பாதுகாவலராகவும், மலேசியாவில் உள்ள அனைத்து இனங்களின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வின் அடையாளமாகவும், நியாயமாகவும், சமமாகவும் ஆட்சி செய்வதில் அவரது மாட்சிமை உறுதியாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் பிரார்த்தனை செய்தார்.









