செராஸில் உள்ள வணிக வளாகத்தின் கழிப்பறையில் 15 வயது சிறுவனிடம் தவறாக நடந்து செய்த வெளிநாட்டவர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நண்பகலில் சிறுவன் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாக செராஸ் காவல்துறைத் தலைவர் ஜாம் ஹலீம் ஜமாலுடின் கூறினார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சந்தேகநபர் எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017இன் கீழ், குழந்தை மீதான பாலியல் வன்கொடுமைக்காக, 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படும்.