நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 30ஆம் தேதி கலைக்கப்படும்

நெகிரி செம்பிலான் சட்டசபை ஜூன் 30-ம் தேதி கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்ற கலைப்பு தொடர்பான விஷயங்களை நெகிரி செம்பிலான் ஆடசியாளர் சுல்தான் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று, இன்று (ஜூன் 7) மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் கூறினார்.

மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள ஆறு மாநிலங்களில் நெகிரி செம்பிலானும் ஒன்றாகும்.

14வது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானில் பக்காத்தான் ஹராப்பான் (PH) 20 இடங்களையும், பாரிசான் நேசனல் (BN) 16 இடங்களையும் வென்றது என்பது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here