பினாங்கின் தாழ்வான பகுதிகளில் இன்று காலை திடீர் வெள்ளம்..!

இன்று புதன்கிழமை (ஜூன் 14) காலை பெய்த கனமழையால், ஜாலான் பி. ராம்லீ மற்றும் ஜாலான் அன்சான் உள்ளிட்ட பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மழையுடன் வீசிய கடுமையான காற்று காரணமாக பெரிய மூங்கில் போன்ற மரங்களும் பாலிக் பூலாவில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.45 மணி நிலவரப்படி, மழை குறைந்தது, ஆனால் பினாங்கு பாலம், துன் டாக்டர் லிம் சோங் யூ எக்ஸ்பிரஸ்வே மற்றும் ஜாலான் மஸ்ஜித் நெகிரி போன்ற முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பினாங்கின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது, ஆனால் பின்னர் வெள்ளம் குறைந்துவிட்டது என்று, பினாங்கு சுற்றுச்சூழல் மற்றும் நலன்புரி குழுவின் தலைவர் பீ பூன் போஹ் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here