நான் அவதூறுக்கு ஆளானேன் என்கிறார் ஹம்சா

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்  தனது வீட்டை செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) உள்நாட்டு வருவாய் வாரியத்தால் (LHDN) சோதனை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை ஏற்க மறுத்தார். என் மீது நிறைய அவதூறுகள் வீசப்பட்டுள்ளன இவை அனைத்திற்கும் நான் பதிலளிக்கப் போவதில்லை. ஏனெனில் இது நம் நாட்டில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது என்று மலாய் மொழி நாளிதழான சினார் ஹரியன் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர்  கூறியிருக்கிறார்.

அவதூறில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக பெரிகாத்தான் தலைமை செயலாளர்  தெரிவித்தார். சரியான நேரம் வரும்போது நான் நடவடிக்கை எடுப்பேன் என்பது உறுதி. அனைத்து அதிகாரப்பூர்வமற்ற மற்றும் அதிகாரப்பூர்வ செய்திகளையும் ஆராய்ந்து அவற்றைத் தொகுக்குமாறு எனது அதிகாரியிடம் கேட்டுக் கொண்டேன்  என்று ஹம்சா கூறினார்.

இங்குள்ள பிஞ்சாய் ரெண்டாவில் மாராங் பெரிகாத்தான் தேர்தல் எந்திரத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அப்போது ஹம்சா கூறுகையில், பெரிக்காத்தான் தலைவர்களின் பெயரைக் கெடுக்கும் அவதூறுதான் நடக்கிறது என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜூன் 16), பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், LHDN ஆல் ஹம்சாவின் வீட்டில் நடந்த சோதனை குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறினார். LHDN அதிகாரிகளின் சோதனையானது ஒரு புலனாய்வு அமைப்பாக ஒரு ஏஜென்சி விஷயம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here