வீட்டின் கழிவறையில் கையில் வெட்டுக் காயத்துடன் ஆடவர் இறந்து கிடக்க கண்டெடுப்பு

சுங்கை பட்டாணியின் தாமான் கெலிசாவில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை உறுதி செய்த கோல முடா மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் ஜைதி சே ஹாசன், நேற்று திங்கள்கிழமை (ஜூன் 19) மதியம் 1.10 மணியளவில் உடலைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

ஏசிபி ஜைதியின் கூற்றுப்படி, மாவட்ட காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் தடயவியல் பிரிவின் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

“58 வயதான நபரின் மனைவி காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தனது கணவரை தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் அவரது அழைப்புகள் பதிலளிக்கப்படாமல் போனதை அடுத்து, “மனைவி பக்கத்து வீட்டுக்காரரைத் தொடர்பு கொண்டு கணவரைச் சரிபார்க்கும்படி கேட்டார்.

“அண்டை வீட்டுக்காரர் வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் ​​இரும்பு கம்பிக்கதவு மூடப்பட்டிருந்தது, ஆனால் வீட்டின் பிரதான கதவு திறந்திருந்தது” என்று ஏசிபி ஜைதி கூறினார்.

வீட்டின் விருந்தினர் அறையில் இரத்தம் இருப்பதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக ஆம்புலன்சுக்கு அழைத்ததாக அவர் கூறினார்.

அந்த ஆணின் உடல் அமர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும், இடது கையில் வெட்டுக்காயத்துடனும் காணப்பட்டதாக அவர் கூறினார்.

“போலீசார் மேற்கொண்ட சோதனைகளுக்குப் பிறகு, விருந்தினர் அறையில் ஒரு பேப்பர் கட்டரைக் கண்டுபிடித்ததாக,” ஏசிபி ஜைதி மேலும் கூறினார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பட்டாணியியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here