சிலாங்கூர் மாநில நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நாள் ஹரி தியாகத் திருநாளை மலேசியர்கள் கொண்டாடவிருக்கின்றனர்.
குறிப்பாக அரச திணைக்களங்கள் மற்றும் முகவர் நிலையங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு இந்த மேலதிக விடுமுறை அளிப்பதாக அரச செயலாளர் ஹரீஸ் காசிம் தெரிவித்தார்.
இருப்பினும், சட்டப்பூர்வ அமைப்புகள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை இதற்கு உட்பட்டது அல்ல. அந்தந்த முதலாளிகள் (அதை பின்பற்றுவது) சார்ந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அரசு ஊழியர்களுக்கும் சிலாங்கூர் மக்களுக்கும் மாநில அரசு தியாக திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது