பல்நோக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலி

ஈப்போவிலுள்ள தாமான் இண்டஸ்ட்ரி ஹலால் மாரா அருகே, ஜாலான் தம்புனில் ஒரு பல்நோக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று மதியம் 12.35 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், கவாசாகி மோட்டார் சைக்கிள் ஓட்டியான முகமட் ஃபாரிட் முகமட் யூசோஃப் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அதே நேரத்தில் 45 வயதான புரோத்தோன் எக்ஸோரா எம்பிவி ஓட்டுநர் காயமடைந்து, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்றார்.

சம்பவ இடத்தில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஈப்போவிலிருந்து தஞ்சோங் ரம்புத்தானை நோக்கிச் சென்ற MPV, ஜாலான் பிங்கிரான் பெர்பாடுவான் 1 நுழைவுச் சாலையில் வலதுபுறம் திரும்பபியபோது விபத்து ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது என்று, ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் கூறினார்.

அதே நேரத்தில், எதிர் திசையில் இருந்து வந்த முகமட் ஃபாரிட் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் MPV வாகனத்தின் முன்பக்க கதவின் மீது மோதியதாக அவர் கூறினார்.

“இந்த மோதலால் முகமட் ஃபாரிட் பல்நோக்கி வாகனத்தில் மோதி, தூக்கி வீசப்பட்டார்.

“மோதலுக்குப் பிறகு, MPV வாகனம் தீப்பிடிக்கத் தொடங்கியது, ஆனால் தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி பொதுமக்களின் உதவியுடன் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

விபத்துக்கான காரணத்தை போலீசார் இன்னும் விசாரித்து வருவதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் யாஹாயா மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here