ம.இ.காவின் இரும்பு பெண் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட டத்தின் படுக்கா ஜெயா பார்த்திபன் காலமானார்.
முன்னாள் செனட்டரான ஜெயா பார்த்திபன் சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில், பந்தாய் மருத்துவமனையில் காலமானதாக அறியமுடிகிறது.
மேலும் கோலாலம்பூரைச் சேர்ந்த டத்தின் படுக்கா ஜெயா பார்த்திபன், ஆரம்ப காலக்கட்டத்தில் மலேசிய வானொலியில் பணியாற்றியதோடு, முன்னாள் செய்திவாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ம.இ.காவின் மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்தபோது , அப்பிரிவிற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, அக்கட்சியின் தலைமையில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.